Posts

Showing posts from 2012
மறத்தமிழர்  சேனையோடு தொகுதியில் தொடர்ந்து போராடி வருகின்ற தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் இரா.ஜெயச்சந்திரத் தேவர் அவர்களிடம் பேசிய போது.....                       தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் சங்கரன்கோவில் ,வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளை பொதுதொகுதியாக மற்ற வழியுறுத்தி கடந்த ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற்றது. இந்த தொகுதியை பொறுத்த வகையில் மொத்தமுள்ள 224 பூத்தில் 140 பூத்துகளில் மறவர்களும், 14 பூத்துகளில் தாழ்த்தப்பட்ட சமூகமும், மீதமுள்ள 70 பூத்துகளில் மற்ற அனைத்து சமூகங்களும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்குகிறார்கள்.                                                                     எங்கள் சமூக மக்கள் அதிகமாக வாழும் தொகுதியில் நாங்கள் போட்டியிட முடியாமல் இருக்கிறோம். தற்பொழுது இடைத்தேர்தல் நடைபெறுவதால் பொதுத்தொகுதியாக மாற்றப்படும் வரை தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்து இந்த தகவலை எங்கள் இனமக்களிடத்தில் எடுத்து செல்லும் விதமாக சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன்கோவில் திடலில் ஜனவரி -8 அன்று  பொதுக்கூட்டம் நட

சங்கரன்கோவில் தொகுதி

மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரனிடம் கேட்டபொழுதில்                                      "இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒருங்கிணைத்த அம்பேத்கர் கூட ரிசர்வு தொகுதிகள் ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை வைத்தார். ஆனால் கடந்த 1967 முதல் தொடர்ந்து 45 வருடங்களாக சங்கரன்கோவில் தனித் தொகுதியாகவே இருந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக சங்கரன்கோவிலை  பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டுமென மறத்தமிழர் சேனை உள்ளிட்ட பெரும்பான்மை சமூக இயக்கங்கள்  தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில்,  தற்பொழுது முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.                                              இத்தொகுதியில் வாழுகின்ற 17 சதவிகிதமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மீதமுள்ள 83 சதவிகித பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக மக்களின் அரசியல் உரிமைகளை அடியோடு 50,60 வருடங்களுக்கு தகர்த்தெறிவதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் எங்கள் மீது  மறைமுகத் தீண்டாமையை திணித்து வருகிறது. 'அரசியல் பொருளாதார நிலைக